ரம்பா கிளர்ச்சி

ராம்பா கிளர்ச்சி (மான்யம் கிளர்ச்சி ) என்பது ஒரு பழங்குடியினர் எழுச்சி. இது மெட்ராஸ்          ப்ரெசிடெண்சியின் கோதாவரி நிறுவனத்தில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையில் நடைபெற்றது. ரம்பா (Rampa)ஆந்திராவின் கடலோரப் பகுதியில் உள்ளது. 
ரம்பா பகுதி 

அந்நிர்வாகப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் போடு(Podu) சாகுபடி முறையை பின்பற்றினர், ஒவ்வொரு ஆண்டும் சில அளவு வனப்பகுதிகள் சாகுபடிக்காக அழிக்கப்பட்டன, ஏனெனில் அதுவே அவர்களின் உணவு ஆதாரமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் பழங்குடியினரை வெளியேற்ற விரும்பினர், அதனால் அப்பகுதிகளில் உள்ள  மரங்கள் அவர்களின் ரயில்வே மற்றும் கப்பலைகளை உருவாக்க உதவும். சென்னை வனச்சட்டம்,1882 அம்மக்களின் சுதந்திர நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அவர்களின் பாரம்பரிய போடு விவசாயத்தில் ஈடுபடுவதை தடை செய்தது. இந்த அடக்குமுறை ஒழுங்கு மான்யம் கிளர்ச்சியின் தொடக்கமாகும். இது ஆகஸ்ட் 1922இல்  தொடங்கி மே 1924இல் அல்லூரி சீதாராம ராஜூ பிடிபட்டு கொள்ளப்படும் வரை நீடித்தது.

 அல்லூரி சீதாராம ராஜு:

கடலோர நகரமான விஷாக்கப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஜூலை 4, 1897ல்  பிறந்தார். இவர் ஆரம்பத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் கீழ் இருந்தார் ஆனால் அதனால் ஒரு வெற்றியும் இல்லை.

இவர் ஆதிவாசிகளிடம் இருந்து கால சோதனையான போர் முறைகள்(Time-Tested methods of war) மற்றும் அவரின் தந்திரங்களை ஆங்கிலேயர்க்கு எதிராக போர் வைக்க சேர்த்தார். மே 7, 1924ல் அவர் மரத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மான்யம் வீருடு (காட்டின் நாயகன்) என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார். ஆந்திர பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளான ஜூலை 4ஆம்  தேதியை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது.