ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கான கையேடு: பணத்தை எங்கே முதலீடு செய்வது? ஒரு எளிய விளக்கம்

நம்மில் பலர் பணத்தை சம்பாதித்தாலும் , அதை எப்படிக் கையாள வேண்டும், எங்கே முதலீடு செய்ய வேண்டும் போன்ற குழப்பங்களை கொண்டிருக்கிறோம். "கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படிப் பெருக்குவது?" என்ற கேள்வி நம் மனதில் ஒரு முறையாவது தோன்றி இருக்கும். ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கும், எங்கே தொடங்குவது என்ற தயக்கம் உள்ளவர்களுக்குமான கட்டுரை இது

முதலீடு என்றால் என்ன?

முதலீடு (Investment) என்பது உங்கள் பணத்தை எதிர்காலத்தில் மேலும் பணம் ஈட்டும் நோக்குடன் ஒரு சொத்து அல்லது திட்டத்தில் போடுவதாகும். உதாரணமாக, வங்கி வைப்பு, பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவை முதலீடுகள்தான்.

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

நீங்கள் முதலீடு செய்வதன் முக்கிய காரணம், பணவீக்கம் (inflation) - உங்கள் பணத்தின் வாங்கும் சக்தியைக் குறைப்பதைத் தடுப்பதுதான். இன்று 100 ரூபாய்க்கு நீங்கள் வாங்கும் பொருளை, ஒரு வருடம் கழித்து அதே 100 ரூபாய்க்கு வாங்க முடியாது. உங்கள் பணம் வளரவில்லை என்றால், காலப்போக்கில் அதன் மதிப்பு குறைந்துவிடும். அதனால், எதிர்கால தேவைகளுக்கு உங்கள் பணம் போதுமானதாக இருக்க முதலீடு அவசியம்.

எ.கா: 10 ஆண்டுகளுக்கு முன் தேநீரின்(Tea) விலை ரூ.5 என்று வைத்துக்கொள்வோம். இன்று அதே தேநீரின் விலை குறைந்தது ரூ.10.

ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கான சிறந்த வழிகள் (Beginners) :

1. வங்கி சேமிப்பு கணக்குகள் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FD)

  • இது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிமையான முதலீட்டு முறையாகும். வங்கியில் உங்கள் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (ஃபிக்ஸட் டெபாசிட்) வைப்பதன் மூலம், உங்களுக்கு நிலையான வட்டி வருமானம் கிடைக்கும். 
  • இது பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், அவசரகால நிதியை (Emergency Fund) உருவாக்கவும் ஏற்றது. இருப்பினும், இதன் வருமானம் பணவீக்கத்தை விட குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

2. மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds)

  • மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஊடுறவு நிதிகள் என்பது, பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து, அதை பங்குகள், கடன் பத்திரங்கள் அல்லது பிற சொத்துக்களில் முதலீடு செய்யும் ஒரு நிதி நிறுவனம். ஒரு நிபுணர் (ஃபண்ட் மேனேஜர்) உங்கள் பணத்தை நிர்வகிப்பார். 
  • மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP (Systematic Investment Plan) முறை மிகவும் பிரபலமானது. இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யலாம். இது ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது, ஏனெனில் இது ஆபத்தை குறைக்கிறது.

3. தங்க முதலீடு

தங்கம் பலநூறு ஆண்டுகளாக தமிழர்களுக்கு முதன்மையான முதலீடாக உள்ளது. நீங்கள் அதை பயன்படுத்தும் வடிவத்தில் (நகைகள், நாணயங்கள்) அல்லது டிஜிட்டல் தங்கமாக, தங்கப் பத்திரங்களாக (Sovereign Gold Bonds) முதலீடு செய்யலாம். தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக ஒரு நல்ல பாதுகாப்பாக கருதப்படுகிறது. டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்கப் பத்திரங்கள் பாதுகாப்பானவை, மேலும் செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் இல்லை.

4. அரசுப் பத்திரங்கள் / திட்டங்கள் (PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா)

அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை. பொது வருங்கால வைப்பு நிதி (PPF - Public Provident Fund) ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும், இது வரி சலுகைகளையும் வழங்குகிறது. பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) போன்ற திட்டங்களும் உள்ளன, இவை நல்ல வட்டி விகிதங்களையும் வரிச் சலுகைகளையும் வழங்குகின்றன.

முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

  • உங்கள் இலக்குகளை தீர்மானிக்கவும்: நீங்கள் எதற்காக முதலீடு செய்கிறீர்கள் (வீடு, படிப்பு, ஓய்வூதியம்)? உங்கள் இலக்குகளின் அடிப்படையில் முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ஆபத்து பொறுப்பு (Risk Appetite): நீங்கள் எவ்வளவு ஆபத்தை ஏற்கத் தயாராக இருக்கிறீர்கள்? அதிக வருமானம் பொதுவாக அதிக ஆபத்துடன் வரும்.
  • நிதித் திட்டம்: உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் சேமிப்புத் திட்டத்தைப் பட்டியலிடுங்கள். இது முதலீட்டுக்கு எவ்வளவு பணம் ஒதுக்க முடியும் என்பதைத் தீர்மானிக்க உதவும்.
  • ஆராய்ச்சி: முதலீடு செய்வதற்கு முன், ஒவ்வொரு முதலீட்டு வழிமுறையையும் பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்யுங்கள்.

முதலீடு என்பது ஒரு பயணம், ஒரு பந்தயம் அல்ல. நீங்கள் ஒரு சிறிய தொகையுடன் தொடங்கலாம். பொறுமை, தொடர்ச்சியான முதலீடு மற்றும் அடிப்படை அறிவுடன், உங்கள் நிதி இலக்குகளை அடைய முடியும். இப்போதே தொடங்கி, உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வையுங்கள்!

Ather Energy IPO - porul.in Explained



Ather Energy is a Indian electric two-wheeler manufacturer based in Bengaluru. Founded in 2013 by Tarun Mehta and Swapnil Jain, both alumni of IIT Madras and started the company out of IIT-Madras Research Park. They produce a range of electric scooters, including Ather 450, Ather 450X etc.

Company Snapshot:

  • Key Information:
    • Company Name : Ather Energy
    • Year of IPO : 2025 
    • Headquarters : Bengaluru
    • Key Executives : Mr. Tarun Mehta - CEO 
    • Stock Symbol and Exchange : NSE: , BSE:

    Sector: Automobiles and EV's






    இந்தியாவில் பொதுவான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள்: நுகர்வோருக்கான ஒரு கையேடு

     நீங்க கடைக்குப் போறீங்களா? சாப்பாடு வாங்குறீங்களா? இல்ல ஒரு புது மொபைல் போன் வாங்கலாம்னு இருக்கீங்களா? எது பண்ணாலும், நீங்க செலுத்துற விலையில ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) ஒரு முக்கிய பங்கு வகிக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? இந்த ஜிஎஸ்டி பத்தி தெரிஞ்சிக்கிறது நம்மளோட அன்றாட செலவுகளைப் புரிஞ்சுக்க ரொம்ப முக்கியம். வாங்க, பொதுவா நம்ம பயன்படுத்தற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்களைப் பத்தி இந்த கட்டுரையில பார்க்கலாம்! உங்க நிதியறிவை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த இதை படிங்க!



    சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி ) :

    இந்தியாவில சரக்கு மற்றும் சேவை வரிய முக்கியமா நாலு விதமா பிரிச்சிருக்காங்க: 5%, 12%, 18% மற்றும் 28%. எந்தப் பொருளு இல்ல சேவையோ, அதோட முக்கியத்துவத்தைப் பொறுத்து இந்த வரி விதிக்கப்படுது.
    • 5% -இது ரொம்ப அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கானது. அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள்னு நம்ம வீட்டுச் சமையலுக்குத் தேவையான பல பொருட்கள் இந்த வரிக்குள்ளதான் வருது. அது மட்டுமில்லாம, நம்ம உடல்நிலை சரியில்லாதப்போ வாங்குற மருந்துகள், நாம ஊருக்குப் போற ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள் கூட இந்த வரிக்குள்ளதான் அடங்கும். அப்போ, அத்தியாவசியமான விஷயங்களுக்குக் குறைவான வரிதான் விதிக்கிறாங்கன்னு புரிஞ்சுக்கலாம்.
    • 12% - இது கொஞ்சம் கூடுதலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கானது. நீங்க கடைகள்ல பாக்கற ரெடிமேட் உணவுப் பொட்டலங்கள், நெய், வெண்ணெய், பாதாம், திராட்சைன்னு சில உலர் பழங்கள், இன்னைக்கு எல்லார் கையிலயும் இருக்கற மொபைல் போன்கள், மழை வந்தா உதவற குடைகள், துணி தைக்கற மிஷின்கள் இது எல்லாமே இந்த வரிக்குள்ளதான் வருது. அதுபோக, சின்னச் சின்ன ஹோட்டல்ல சாப்பிடுற சாப்பாடு, சில பிசினஸ் கிளாஸ் விமானப் பயணங்கள் கூட இந்த வரிக்குள்ளதான் வருது.
    • 18% - இது பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கானது. நம்ம வீட்ல யூஸ் பண்ற சோப்பு, ஷாம்பூ, டூத் பேஸ்ட், நம்ம துணி துவைக்கற வாஷிங் மெஷின், சாப்பாடு வைக்கற பிரிட்ஜ், டிவி இது எல்லாமே இந்த வரிக்குள்ளதான் வருது. இன்னைக்கு முக்கியமானதா இருக்கற இன்டர்நெட், மொபைல் ரீசார்ஜ், நாம வெளியில போய் சாப்பிடுற நல்ல ரெஸ்டாரன்ட் சாப்பாடு (சில கண்டிஷன்களோட), கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட சர்வீஸ் இது எல்லாமே இந்த வரிக்குள்ளதான் வருது.
    • 28% - இது ஆடம்பரமான பொருட்கள் மற்றும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கானது. புதுசா கார் வாங்கணும்னு ஆசையா இருக்கா? இல்ல ஏசி, பெரிய எல்இடி டிவி வாங்கணும்னு இருக்கா? இதெல்லாம் இந்த வரிக்குள்ளதான் வரும். அது மட்டுமில்லாம, கூல்டிரிங்க்ஸ், சிகரெட் மாதிரியான பொருட்களுக்கும் இந்த வரிதான். சினிமா தியேட்டர் போறது, தீம் பார்க்குக்குப் போறது மாதிரியான பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் இந்த வரி பொருந்தும்.

    சரி, நாம வாங்குற பொருள் இல்ல சேவையோட ஜிஎஸ்டி எவ்ளோன்னு எப்படித் தெரிஞ்சிக்கிறது? நீங்க எந்தக் கடைக்குப் போனாலும், அவங்க குடுக்குற விலைப்பட்டியலை (Bill) கண்டிப்பாப் பாருங்க. அதுல ஜிஎஸ்டி எவ்ளோன்னு தெளிவா போட்டுருப்பாங்க. ஒருவேளை போடலைன்னா, நீங்க அவங்ககிட்ட கேட்கலாம். ஒவ்வொரு பொருளுக்கும் இல்ல சேவைக்கும் வரி விகிதம் மாறுபடும்னு ஞாபகம் வெச்சுக்கோங்க.

    ஜிஎஸ்டி வந்ததுனால வரி கட்டுறது கொஞ்சம் எளிமையாயிருக்கு சொல்றாங்க. ஆனா, சில பொருட்களோட விலை ஏறி இருக்கவும் வாய்ப்பிருக்கு. இருந்தாலும், இது நம்ம நாட்டோட பொருளாதாரத்துக்கு நல்லதுன்னு நம்பலாம்.

    அடுத்த தடவை நீங்க கடைக்குப் போகும்போது, நீங்க வாங்குற பொருளுக்கு எவ்ளோ ஜிஎஸ்டி போடுறாங்கன்னு கொஞ்சம் கவனிங்க. இது உங்க பணத்தோட மதிப்பு உங்களுக்குத் தெரிய உதவும். இந்த கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதா இருந்திருக்கும்னு நம்புறோம்!

    தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ( Frequently Asked Questions)

    1.கேள்வி: நான் ஒரு உணவகத்தில் சாப்பிடுகிறேன். பில்லில் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்ன? 

    பதில்: சிஜிஎஸ்டி என்பது மத்திய அரசுக்கான சரக்கு மற்றும் சேவை வரி, எஸ்ஜிஎஸ்டி என்பது மாநில அரசுக்கான சரக்கு மற்றும் சேவை வரி. ஒரு மாநிலத்துக்குள்ளேயே பொருட்கள் மற்றும் சேவைகள் விற்கப்படும்போது இந்த இரண்டு வரிகளும் விதிக்கப்படும்.

    2.கேள்வி: ஒரு பொருளின் அதிகபட்ச விற்பனை விலையில் (எம்ஆர்பி) ஜிஎஸ்டி சேர்க்கப்பட்டுள்ளதா அல்லது நான் கூடுதலாக செலுத்த வேண்டுமா? 

    பதில்: பொதுவாக, பெரும்பாலான பொருட்களின் எம்ஆர்பியில் ஜிஎஸ்டி சேர்க்கப்பட்டிருக்கும். நீங்கள் வாங்கும் முன் இதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

    3.கேள்வி: ஜிஎஸ்டி விகிதங்கள் எப்போது மாறும்?

    பதில்: ஜிஎஸ்டி விகிதங்கள் அவ்வப்போது அரசாங்கத்தால் மாற்றப்படலாம். புதிய விகிதங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

    புதிய நிதியாண்டுக்கான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டமிடல் - Porul.in

         புதிய நிதியாண்டு (ஏப்ரல் 1) துவங்கும் முன்னர், நமது சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியம். 

    கடந்த ஆண்டின் நிதி இலக்குகளை அடைந்தோமா, இந்த ஆண்டுக்கான புதிய இலக்குகள் என்ன என்பதை திட்டமிடுவது அவசியம்.

    ஏன் திட்டமிடல் முக்கியம்?

    திட்டமிடல் இல்லாமல் செய்யும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. சரியான திட்டமிடல் மூலம், நமது நிதி தேவைகளை பூர்த்தி செய்து, பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க முடியும்.

    puthiya-nidhiyanaadukaana-semipu-mudhaleedu-thittam


    சேமிப்புக்கான வழிகள்:

    • வங்கி சேமிப்புக் கணக்குகள்: இது அடிப்படை சேமிப்பு முறையாகும். உங்கள் அவசரத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படும்போது இது உதவும்.  அவசரகால நிதி (Emergency Fund) மேலும் படிக்கவும். 

    • நிலையான வைப்புத்தொகைகள் (Fixed Deposits): ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் பணத்தை வங்கியில் வைப்பதன் மூலம் நிலையான வட்டி வருமானம் பெறலாம்.

    • சிறு சேமிப்புத் திட்டங்கள்: தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் (PPF, NSC), சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற அரசாங்க திட்டங்கள் நல்ல வட்டி விகிதத்தையும் பாதுகாப்பையும் அளிக்கின்றன.

    மேலும் படிக்கவும்: வருமான வரி பிடித்தம் (TDS) என்றால் என்ன ? 

    முதலீட்டுக்கான வாய்ப்புகள் (அடிப்படை அறிமுகம்):

    • ஊடுறவு நிதிகள் (Mutual Funds): சந்தை அபாயங்கள் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானம் தரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும், கடன் பத்திரங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யும் ஊடுறவு நிதி சந்தை அபாயத்தை சற்று குறைக்கும்.
    • பங்குகள் (Stocks): பங்குச் சந்தை பற்றிய அறிவு இருந்தால், இதுவும் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு.
    • தங்கம் மற்றும் நிலம் (ரியல் எஸ்டேட்) : இவை நீண்ட கால முதலீட்டுக்கான விருப்பங்களாக உள்ளன.

    திட்டமிடுவது எப்படி?

    1. உங்கள் நிதி இலக்குகளை வரையறுக்கவும்: உங்களுக்கு என்ன தேவை, எப்போது தேவை என்பதை தெளிவாக முடிவு செய்யுங்கள் (உதாரணமாக, குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குவது, ஓய்வு காலம்).
    2. வரவு செலவு ஆய்வு: உங்கள் வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கிட்டு, எவ்வளவு சேமிக்க முடியும் என்று பாருங்கள்.
    3. உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
    4. வருமான வரி சேமிப்புக்கான வழிகளை ஆராயுங்கள்.
    5. தொடர்ந்து உங்கள் திட்டத்தை மதிப்பாய்வு செய்து தேவைக்கேற்ப மாற்றவும்.
    புதிய நிதியாண்டு ஒரு புதிய தொடக்கம். சரியான திட்டமிடலுடன் உங்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டு இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள்.

    பான் கார்டு: முக்கியத்துவம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

     பான் கார்டு (PAN Card) என்பது இந்தியாவில் ஒவ்வொரு தனிநபருக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் வருமான வரித்துறையால் வழங்கப்படும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இது ஒரு தனித்துவமான 10 இலக்க எண்ணைக் கொண்டது. பதினெட்டு வயதைக் கடந்தவர்கள் அனைவரும் இதை விண்ணப்பித்து பெறலாம். பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் ஏதாவது ஒரு பெற்றோரையோ அல்லது காப்பாளரின் பெயரை பயன்படுத்தி பெற முடியும். 



    பான் கார்டின் முக்கியத்துவம்:

    • வருமான வரி செலுத்துதல்: பான் கார்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கு கட்டாயமாகும்.
    • வங்கி கணக்கு திறப்பது: வங்கியில் புதிய கணக்கு திறக்க பான் கார்டு அவசியம்.
    • நிதி பரிவர்த்தனைகள்: பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கு (உதாரணமாக, சொத்து வாங்குவது, விற்பது) பான் கார்டு அவசியமானது.
    • முதலீடுகள்: பங்குகள், ஊடுறவு நிதிகள் (Mutual Funds) போன்ற முதலீடுகள் செய்ய பான் கார்டு முக்கியம்.
    • அடையாளச் சான்று: இது ஒரு நம்பகமான அடையாளச் சான்றாகவும் பயன்படுகிறது.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

    1. பான் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. கீழே சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன:
    2. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் (NSDL அல்லது UTIITSL).
    3. "புதிய PAN கார்டுக்கு விண்ணப்பிக்கவும்" (Apply for New PAN Card) என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
    4. தேவையான அனைத்து விவரங்களையும் (பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவை) சரியாக நிரப்பவும். 
    5. உங்களுடைய புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றவும்.
    6. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
    7. விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒப்புகை எண் (Acknowledgement Number) வழங்கப்படும். எதிர்கால குறிப்புக்காக இதை சேமித்து வைக்கவும்.
    உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் பான் கார்டு அஞ்சல் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். டிஜிட்டல் பான் கார்டையும் நீங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

    பான் கார்டு ஒரு இன்றியமையாத ஆவணம் என்பதால், தகுதியுள்ள அனைவரும் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.

    சேமிப்பு கணக்கு vs நடப்புக் கணக்கு: அடிப்படை வேறுபாடுகள் மற்றும் உங்களுக்கு எது சிறந்தது?

         வங்கி சேவைகள் பெருகிவிட்ட இந்த காலத்தில், சேமிப்பு கணக்கு (Savings Account) மற்றும் நடப்புக் கணக்கு (Current Account) ஆகிய இரண்டு வகையான கணக்குகளும் முக்கிய நிதி கருவிகளாக விளங்குகின்றன.  பணம் சேமிக்க, பரிவர்த்தனை செய்ய, மற்றும் நமது நிதி தேவைகளை நிர்வகிக்க இந்த கணக்குகள் உதவுகின்றன.  இருப்பினும், இவை இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை, அவற்றின் அம்சங்களிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

    சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்கும் ஒப்பீட்டு அட்டவணை.

    • சேமிப்பு கணக்கு:  பெயர் குறிப்பிடுவது போலவே, சேமிப்பு கணக்கு முக்கியமாக தனிநபர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், பாதுகாப்பான முறையில் பணத்தை இருப்பு வைக்கவும் உருவாக்கப்பட்டது.  சாதாரண மக்கள் தங்கள் அன்றாட சேமிப்பு, மாத வருமானம், ஓய்வூதியம் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து, அதற்கு குறைந்த வட்டியையும் பெற இது பயன்படுகிறது.
    • நடப்புக் கணக்கு:  நடப்புக் கணக்குகள் முக்கியமாக வணிக நோக்கங்களுக்காகவும், அதிக எண்ணிக்கையிலான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் ஏற்றது.  வணிகர்கள், நிறுவனங்கள், அரசு அமைப்புகள் போன்றவர்கள் தங்கள் தினசரி வியாபார நடவடிக்கைகளுக்காக, பணம் செலுத்துதல், பெறுதல், மற்றும் நிர்வகித்தல் போன்ற தேவைகளுக்கு இந்த கணக்கை பயன்படுத்துகிறார்கள்.  வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.

    முக்கிய வேறுபாடுகள் – ஒப்பீடு அட்டவணை:

         வங்கி சேவைகள் பெருகிவிட்ட இந்த காலத்தில், சேமிப்பு கணக்கு (Savings Account) மற்றும் நடப்புக் கணக்கு (Current Account) ஆகிய இரண்டு வகையான கணக்குகளும் முக்கிய நிதி கருவிகளாக விளங்குகின்றன.  பணம் சேமிக்க, பரிவர்த்தனை செய்ய, மற்றும் நமது நிதி தேவைகளை நிர்வகிக்க இந்த கணக்குகள் உதவுகின்றன.  இருப்பினும், இவை இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை, அவற்றின் அம்சங்களிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

    சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்கும் ஒப்பீட்டு அட்டவணை.

    • சேமிப்பு கணக்கு:  பெயர் குறிப்பிடுவது போலவே, சேமிப்பு கணக்கு முக்கியமாக தனிநபர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், பாதுகாப்பான முறையில் பணத்தை இருப்பு வைக்கவும் உருவாக்கப்பட்டது.  சாதாரண மக்கள் தங்கள் அன்றாட சேமிப்பு, மாத வருமானம், ஓய்வூதியம் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து, அதற்கு குறைந்த வட்டியையும் பெற இது பயன்படுகிறது.
    • நடப்புக் கணக்கு:  நடப்புக் கணக்குகள் முக்கியமாக வணிக நோக்கங்களுக்காகவும், அதிக எண்ணிக்கையிலான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் ஏற்றது.  வணிகர்கள், நிறுவனங்கள், அரசு அமைப்புகள் போன்றவர்கள் தங்கள் தினசரி வியாபார நடவடிக்கைகளுக்காக, பணம் செலுத்துதல், பெறுதல், மற்றும் நிர்வகித்தல் போன்ற தேவைகளுக்கு இந்த கணக்கை பயன்படுத்துகிறார்கள்.  வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.

    முக்கிய வேறுபாடுகள் – ஒப்பீடு அட்டவணை:

    அம்சம் சேமிப்பு கணக்கு (Savings Account) நடப்புக் கணக்கு (Current Account)
    நோக்கம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், பாதுகாப்பான இருப்பு வணிக பரிவர்த்தனைகளை எளிதாக்குதல், அதிக பரிவர்த்தனைகள்
    வட்டி உண்டு, பொதுவாக குறைவாக இருக்கும் (வங்கியை பொறுத்து மாறுபடும்) பொதுவாக வட்டி வருமானம் கிடையாது
    பரிவர்த்தனை வரம்பு உண்டு, ஒரு நாளைக்கு அல்லது மாதத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் பொதுவாக பரிவர்த்தனை வரம்புகள் குறைவு அல்லது கிடையாது, அதிக பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும்
    யார் திறக்கலாம் தனிநபர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகள் வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர், கூட்டாண்மை நிறுவனங்கள், அரசு அமைப்புகள்
    குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) பொதுவாக குறைவாக இருக்கும், சில கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை பொதுவாக அதிகமாக இருக்கும், குறைந்தபட்ச இருப்பு கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்
    ஓவர் டிராஃப்ட் வசதி பொதுவாக கிடையாது சில வங்கிகள், தகுதியான நடப்புக் கணக்குகளுக்கு ஓவர் டிராஃப்ட் வசதி வழங்கலாம்
    சேவைகள் காசோலை புத்தகம், ஏடிஎம் அட்டை, இணைய வங்கி, மொபைல் வங்கி காசோலை புத்தகம், ஏடிஎம் அட்டை, இணைய வங்கி, மொபைல் வங்கி, வணிக பரிவர்த்தனை வசதிகள் அதிகம்

    வட்டி வருமானம்: 

         சேமிப்பு கணக்கில், நீங்கள் உங்கள் கணக்கில் வைத்துள்ள சேமிப்பிற்கு வட்டி வருமானம் பெறுவீர்கள். இது பொதுவாக மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ கணக்கில் வரவு வைக்கப்படும்.

    பரிவர்த்தனை வரம்புகள்: 

        சேமிப்பு கணக்குகளில் பரிவர்த்தனைகளுக்கு சில வரம்புகள் உண்டு. நடப்புக் கணக்குகளில் வரம்புகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம், இது வணிகங்களுக்கு வசதியானது.

    எது உங்களுக்கு சிறந்தது?

        சேமிப்பு கணக்கா அல்லது நடப்புக் கணக்கா என்பதைத் தீர்மானிப்பது உங்கள் தனிப்பட்ட அல்லது வணிகத் தேவைகள் தான்.

    • தனிப்பட்ட பயன்பாட்டிற்கு, சேமிப்பு மற்றும் குறைந்த அளவிலான பரிவர்த்தனைகளுக்கு சேமிப்பு கணக்கு போதுமானது. ஒரு வேளை நீங்கள் ஊதியம் வாங்கும் நபர் என்றால் சேமிப்பு கணக்கே உங்களுக்கு சிறந்தது.
    • வணிக பயன்பாட்டிற்கு மற்றும் அதிக பரிவர்த்தனைகளுக்கு நடப்புக் கணக்கு அவசியமானது. வணிக நோக்கத்திற்காக நீங்கள் ஒரு வங்கி கணக்கை துவங்குவது பின்னர் உங்களுக்கு சிரமங்களை தரலாம்.

    வருமான வரி பிடித்தம் (TDS) என்றால் என்ன? - Porul.in

    வருமான வரி பிடித்தம் 

        வருமான வரி பிடித்தம் அல்லது TDS என்பது இந்தியாவில் உள்ள வருமானம் ஈட்டும் நபர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரித் தொகையை முன்கூட்டியே வருமான வரியாக பிடித்தம் செய்வது ஆகும்.இந்திய வருமான வரிச் சட்டம், 1961 இதை வலியுறுத்துகிறது.

    Varumaana vari piditham endraal enna

    ஏன் முன்னரே பிடித்தம் செய்யப்படுகிறது?

        இந்திய அரசுக்கு ஒரு நிலையான வருவாயை முன்னரே இது பெற்று தருவதோடு, வரி ஏய்ப்பை தடுத்து வரி செலுத்தும் மக்களை அதிகப்படுத்துகிறது. 

    எ.கா: ஒவ்வொரு வணிக ஆண்டின் இறுதியில் வரி தொகையை செலுத்த மக்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. வணிக ஆண்டின் இறுதிக்காக அரசுகள் காத்திருப்பதை தவிர்க்க முன்னரே அதில் ஒரு விழுக்காடு பிடித்தம் செய்யப்படுவதால் அரசின் செலவினங்களை தடையில்லாமல் மேற்கொள்ள முடியும்.

    சம்பளம்/ஊதியம் வாங்குவோருக்கான வருமான வரி பிடித்தம்

        வருமான வரிச் சட்டம், 1962 192-ம் சட்டப்பிரிவின் படி பணியில் உள்ள மாத ஊதியம் பெறுவோர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டு தொகையை வருமான வரி பிடித்தமாக (TDS) அரசிற்கு செலுத்த வேண்டும். இதை ஊழியரிடத்தில் இருந்து பெற்று அரசிற்கு செலுத்த வேண்டியது பணியளிப்பவரின் கடமை ஆகும்.
    க்கு அமர்த்துபவர்பனி பணிக்கு அமர்த்துபவர்